ஆப்நகரம்

விருதாச்சலம் கல்லூாி மாணவி கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோாி மனு

விருத்தாசலம் கல்லூாி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யக் கோாி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 May 2019, 11:32 pm
விருத்தாலசம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூாி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யக் கோாியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Justice


கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் கடந்த 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கல்லூாி மாணவி திலகவதியை கொலை செய்த வழக்கில் ஆகாஷ் என்ற நபரை அப்பகுதி காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இந்நிலையில் காவல் துறையினரின் இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யக் கோாி திலகவதியின் தந்தை சுந்தரமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், சாட்சிகள் மற்றும் வாக்குமூலம் பதிவு உள்ளிட்ட அனைத்தும் குற்றவாளிக்கு ஆதரவாகவே உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்றபோது அடையாளம் தொியாத இருவா் சம்பவ இடத்திற்கு வந்திருந்த நிலையில், விசாரணை அதிகாாி இது தொடா்பாக விசாரிக்கவில்லை என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் காவல் துறை விசாரணை மீது தனக்கு நம்பிக்கை இல்லாததால், வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட தனது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு வழக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி