ஆப்நகரம்

அகவிலைப்படி உயர்வு எங்களுக்கு இல்லையா? ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை!

அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Feb 2022, 8:09 am
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அகவிலைப்படி 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.
Samayam Tamil tn ration


முதல்வர் அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இது குறித்து கூட்டுறவு சங்கம் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலை கடை சார்பில் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குண்டை தூக்கி போட்ட உத்தரவு: ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சி!அந்த மனுவில், “ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதும், ரேஷன் கடை ஊழியர்கள் புதிய ஊதிய உயர்வு பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு, அப்போதைய அதிமுக அரசு மூலம் புதிய ஊதிய உயர்வு ஆணை வெளியிட்டபோது 114 சதவீதம் அகவிலைப்படியை 100 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் இணைத்துவிட்டு, மீதம் 14 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கலாம் என குறிப்பிடப்பட்டது.

அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெறும்போது கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்கலாம் என்பது விடுபட்டு விட்டது.
இறையன்பு வெளியிட்ட உத்தரவு: புதிய திட்டம் தொடக்கம்!
இதை தொடர்ந்து கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படியை தற்போது தமிழக அரசு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால், அதிமுக அரசு செய்த குழப்பத்தினை சுட்டிக்காட்டி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு இன்று வரை அகவிலைப்படிக்கான அறிவிப்பு, கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.

ரேஷன் கடை பணியாளர்களின் வறுமை நிலையை கருதியும், கடுமையான பணி நிலையை மனிதாபிமானத்துடன் அணுகி, அகவிலைப்படி உயர்வினை நிலுவை தொகையுடன் விரைந்து வழங்கிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி