ஆப்நகரம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வயது 160: சிறப்பு தபால் தலை வெளியீடு!

சென்னை உயர் நீதிமன்றத்தின் 160வது ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

Samayam Tamil 15 Aug 2022, 11:09 am
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil Madras high court


நாட்டின் 75 வது சுதந்திர தினம் வளக்கமான உற்சாகத்துடன் கொண்டாடபட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், 1862ஆம் ஆண்டு இதே நாளில் துவங்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 160வது ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், சிறப்பு தபால் தலையை தலைமை நீதிபதி வெளியிட, அதனை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயருமா? அமைச்சர் சொன்ன பதில்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய நான்கு டிரைவர்களுக்கு தலைமை நீதிபதி, தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
கனல் கண்ணனை தூக்கிய போலீஸ்: நீதிபதி முன் ஆஜர்படுத்த தீவிரம்!
நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி