ஆப்நகரம்

தமிழகத்தில் 66.2% பேரின் உடலில் இம்யுனோகுளோபுலின்-ஜி இருக்காம்..! இது எதுக்கு?

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இம்யுனோகுளோபுலின்-ஜி ஆன்டிபாடி குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு

Samayam Tamil 31 Jul 2021, 4:45 pm
நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் இருந்தால் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மட்டுமன்றி தெருக்கோடியில் இருக்கும் மருத்துவர் கூறியதையும் நாம் கேட்டிருப்போம். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை விட சத்தான உணவுகளும், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் விட்டமின் சி, ஏ, இ கொண்ட உணவு பொருட்களும் பரிந்துரைக்கப்படுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்


இம்யுனோகுளோபுலின்-ஜி

கொரோனாவை எதிர்க்கும் (sars cov 2) இம்யுனோகுளோபுலின்-ஜி எனப்படும் ஆன்டிபாடி உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் குழு இதுகுறித்து சர்வே ஒன்றை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில், 66.2% பேரின் உடலில், கோவிட் வைரசை எதிர்க்கும் இம்யுனோகுளோபுலின்-ஜி எனப்படும் நோயெதிர் உயிரி இருப்பது தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள், கிராமங்கள், நகரங்களில் என மொத்தம் 26610 பேருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது.


புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் சர்ப்ரைஸ்: அமைச்சர் தகவல்!

பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை திரட்டியதில் 26610 பேரில் 17624 பேருடைய ரத்தத்தில் கொரோனாவை எதிர்க்கும் இம்யுனோகுளோபுலின்-ஜி இருப்பது தெரிய வந்துள்ளது. இது மொத்த ஆய்வில் 66.2%. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 84% சதவீதமும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 37% சதவீதமும் இம்யுனோகுளோபுலின்-ஜி இருப்பது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி