ஆப்நகரம்

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா; எண்ணிக்கை 7ஆக உயர்வு

மக்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Mar 2020, 2:35 pm
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர், நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்த ஒருவர் என நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு- பொதுமக்கள் உஷாராக இருங்க!

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ஒருவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் என இன்று மட்டும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி