ஆப்நகரம்

'செல்லம் என் சிங்கமே'... கஸ்தூரியை வம்புக்கு இழுத்து வாங்கிக்கட்டிய திமுக நிர்வாகி!

திமுக நிர்வாகிக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே ட்வீட் போர் நடந்து வருகிறது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 30 Apr 2023, 7:56 pm
தமிழகத்தில் அடுத்தடுத்து உலுக்கி வரும் கொலை சம்பவங்கள் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்த சர்புதீன் (40) என்பவரை நேற்று பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து தப்பியது. இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil kasthuri


இதன் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு ஆதங்கம் தெரிவித்த நடிகை கஸ்தூரி ட்விட்டரில் '' நேர்மையாளர்கள் உயிருக்கு தமிழ்நாட்டில் உத்திரவாதம் இல்லை. இது தான் சமூக நீதியா ? எந்த ஜாதி எந்த மதமாக இருந்தாலும் அநியாயத்தை எதிர்த்தால், கேள்வி கேட்டால், போட்டு தள்ளுவதா? '' என கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு எதிரிவினையாற்றிய திமுக ஐடி விங் நிர்வாகி எஸ். தியாகராஜன் '' நீங்கள் நேர்மையானவர் இல்லையா? நீங்கள் நன்றாகதானே இருக்கீங்க, அதிமுகவுக்கு மட்டுமே ஓட்டு போட்டு பழகிய குடும்பம் நீங்கள், திமுக அரசு மீது அவதூறு பரப்புவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.'' என இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

பொதுவாக கஸ்தூரி பகிரும் அரசியல் சார்ந்த ட்வீட்டுகளுக்கு திமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதற்கு, அவர் திமுக அரசை டார்கெட் செய்து ட்வீட் போட்டு வருவதுதான். இந்த நிலையில், எஸ். தியாகராஜன் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி '' வாங்க செல்லம் என் self goal சிங்கமே .... நான் வெளியூரில் பத்திரமா இருக்கேன்... தெரியாதா? சரி விடுங்க போயி match பாருங்க போங்க'' என்று கிண்டலடித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடக்கும் சென்னை - பஞ்சாப் இடையேயான ஐபிஎல் போட்டியை பார்த்து வருகிறார். அதை சுட்டிக்காட்டிதான் கஸ்தூரி திமுக நிர்வாகியை கிண்டலடித்துள்ளார்.


கஸ்தூரி சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மானின் மனைவிக்கு தமிழ் தெரியாதா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார். அது ரஹ்மானை இவர் மறைமுகமாக தாக்குவதாக நெட்டிசன்கள் சாடினார். அப்போது கஸ்தூரியை தாக்கி ட்வீட் போட்ட திமுக தியாகராஜன் '' மேடம் உங்க வன்மத்தை அவரிடம் காட்டுனீங்க அவர் எவ்ளோ அன்பா பதில் சொல்லியிருக்கார் பாருங்க, அவர் வீட்ல என்ன பேசுவாங்க உங்களுக்கு தெரியனுமா?அண்ணாமலைகிட்ட சொல்லுங்க ஆடியோ ரெக்கார்டிங் பண்ணி அனுப்புவார். அடுத்தவன் வீட்ல எட்டி பார்க்காதீங்க ப்ளீஸ்'' என கிண்டல் செய்தார்.

அதற்கு கஸ்தூரி '' சும்மா உருட்டாதீங்க. என் கேள்வியில் வன்மம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் தெரியாமல் இருந்தது, அவரே சொல்லித்தானே தெரிய வந்தது. வியப்பு கலந்த நியாயமான வினா எழுப்பியிருந்தேன். நேர்மையாக நேரடியாக என் சந்தேகத்தை கேட்டேன். குறுக்கு புத்தி படைத்தவர்கள் உள்ளே புகுந்து இதில் குளிர் காய நினைக்காதீர்கள். வெறுப்பு அரசியல் செய்யும் திராவிடிய சித்தாந்தவாதிகள் கிடைத்தது சாக்கு என்று இல்லாத பிரச்சினையை உருவாக்க துடிக்கிறார்கள். இதில் அண்ணாமலை எங்கு வந்தார். அதிலேயே தெரிகிறது உங்கள் நோக்கம்'' என இப்படி கஸ்தூரி ரிப்ளை செய்திருந்தார். இப்படி இருவருக்குமான ட்வீட் போர் அடிக்கடி நடந்து வருகிறது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி