ஆப்நகரம்

அமைச்சர் பொன்முடி கார் விபத்து: தொழிலாளி கவலைக்கிடம்!

அமைச்சர் பொன்முடி பயணித்த கார் மோதியதில் தொழிலாளி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 9 May 2023, 7:02 am
அமைச்சர் பொன்முடியின் கார் நேற்று இரவு மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ponmudi car accident


திமுகவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினர்.

அந்த வகையில் கடலூர் தேரடி வீதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பொன்முடி இரவு 8.30 மணி அளவில் தனது காரில் விழுப்புரம் நோக்கி புறப்பட்டார். அப்போது கடலூர் அடுத்த காராமணிக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது, அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது அமைச்சர் பொன்முடியின் கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் நடுவீரப்பட்டியைச் சேர்ந்த ஜோதி உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அமைச்சரின் பாதுகாப்பு வாகன காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஜோதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக நெல்லிக்குப்பம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி