ஆப்நகரம்

200 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளம்பெண்..! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

அருப்புக்கோட்டை அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் 200 அடி கிணற்றில் குதித்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் அவரை உயிருடன் மீட்டனர்.

Samayam Tamil 10 Jun 2020, 4:16 pm
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் - முத்துக்காளை தம்பதியரின் மகள் வளர்மதி (வயது 16). வளர்மதியின் தகப்பனார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே வளர்மதி தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பஞ்சு மில் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Samayam Tamil இளம்பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்


தற்போது ஊரடங்கு உத்தரவால் நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்திலையில் அவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வளர்மதி தன் ஊருக்கு வெளியே அய்யனார் கோவில் அருகே உள்ள 200 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

தகவல் அறிந்து உடனடியாக கிராமத்தினர் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அவருடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கிணற்றில் குதித்த இளம்பெண்ணை 1 மணி நேரமாக போராடி உயிருடன் மீட்டனர்.

பதிவு செய்யப்படாத கொரோனா உயிரிழப்புகள்: உண்மையை மறைக்கிறதா அரசு?

தலையில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த வளர்மதியை உடனடியாக சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்த இளம்பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு கிராமத்தினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அடுத்த செய்தி