ஆப்நகரம்

கரூரில் பூட்டிக்கிடக்கும் ஆதார் மையம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிப்பு

கரூரில் நீண்ட நாட்களாக ஆதார் மையம் பூட்டிக்கிடப்பதால், பொதுமக்கள் ஆதார் அட்டை பெற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

TNN 8 Mar 2017, 8:46 pm
கரூரில் நீண்ட நாட்களாக ஆதார் மையம் பூட்டிக்கிடப்பதால், பொதுமக்கள் ஆதார் அட்டை பெற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Samayam Tamil aadhaar centre remains closed in karur district locals complain
கரூரில் பூட்டிக்கிடக்கும் ஆதார் மையம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிப்பு


அங்குள்ள கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகத்தில் ஆதார் மையம் உள்ளது. அந்த மையம் நீண்ட நாட்களாகப் பூட்டி கிடக்கிறது. ஆதார் அட்டை வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு, புகைப்படம் பிடிக்க வந்துவிட்டு, வெறுங்கையுடன் திரும்பிச் செல்கிறார்கள்.

வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்குவது வரையிலும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதுபற்றிய புரிதல் இன்றி, குறிப்பிட்ட ஆதார் அட்டை வழங்கும் மைய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் பாதிக்கப்படுவதே நாங்களே எனவும் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Aadhaar centre remains closed in Krishnarayapuram, Karur District; public and school students complain.

அடுத்த செய்தி