ஆப்நகரம்

அனைத்து பள்ளி மாணவா்களுக்கும் ஆதாா் கட்டாயம் – பள்ளிக்கல்விதுறை உத்தரவு

வருகிற 31ம் தேதிக்குள் தொடக்கக்கல்வியில் பயிலும் அனைத்து பள்ளி மாணவா்களும் புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 13 Dec 2017, 5:51 pm
வருகிற 31ம் தேதிக்குள் தொடக்கக்கல்வியில் பயிலும் அனைத்து பள்ளி மாணவா்களும் புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil aadhaar must for all school students
அனைத்து பள்ளி மாணவா்களுக்கும் ஆதாா் கட்டாயம் – பள்ளிக்கல்விதுறை உத்தரவு


தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவா்களுக்கு ஒன்றிய அளவில் ஆதாா் எடுப்பதற்கான பணிகளை உதவித் தொடக்க கல்வி அலுவலா்கள் விரைந்து முடிக்க வேண்டும். இப்பணிகள் டிச.31ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

ஆதார் புகைப்பட அட்டை எடுக்கப்படாத மாணவர்களின் ஒட்டு மொத்த விவரங்களைப் பெற்று, ஆதார் எடுக்கும் முகமையினரிடம் செயல்திட்டத்தை வழங்கி, ஆதார் எடுக்கும் நாள்களில் அம்மையத்தில் கல்வித் துறையைச் சார்ந்த பொறுப்பான நபர் ஒருவரை நியமித்து அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அட்டை எடுக்கும் பணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும்.

கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் அனைத்து மாணவர்களின் விவரங்கள் பதிவு முடிவடைந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்கள் இருக்கும் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாற்றப்படுதல், 20-க்கும் குறைந்த நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகே இருக்கும் பள்ளிகளோடு இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர் பணியிடங்களைத் திரும்ப அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி