ஆப்நகரம்

ஆற்றில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத் திறைப் பூண்டி முல்லையாறு ஆற்றுப் பகுதியில் 3000 ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 16 May 2019, 6:10 pm
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத் திறைப் பூண்டி முல்லையாறு ஆற்றுப் பகுதியில் 3000 ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil adhar


ஆற்றுப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் இதனைக் கண்டு பெரியவர்களிடம் தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்தூறையினர் அங்கு விரைந்தனர்.

4 கோணிப் பைகளில் இந்த ஆதார் கார்டுகள் கிடந்துள்ளன. கலால் வரித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதனை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

காட்டிமேடு, வடபதி, ஆதிரங்கம் ஆகிய அருகில் உள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களது ஆதார் அட்டைகள் இவ்வாறு தூக்கி எறியப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தண்ணீரில் விழந்ததால் அட்டைகள் சிதிலமடைந்துள்ளன. அதனால் அதிலுள்ள பெயரை படிக்க முடியவில்லை என காவல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி