ஆப்நகரம்

ஆண்டாள் எனக்கு அம்மா மாதிரி: வைரமுத்து புதுப்பேச்சு

ஆண்டாள் எனக்கு தாய் போன்றவர் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Jan 2018, 2:31 pm
ஆண்டாள் எனக்கு தாய் போன்றவர் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
Samayam Tamil aandaal is equal to my mother says vairamuthu
ஆண்டாள் எனக்கு அம்மா மாதிரி: வைரமுத்து புதுப்பேச்சு


ஆண்டாள் சர்ச்சை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த வைரமுத்து, ஆண்டாளின் அருந்தமிழை கடந்த 40 ஆண்டுகளாக தான் சுவாசித்து வருகிறேன் என்றும் அவரது தமிழை வைணவர்களை விட நன்கு அறிந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

“இனிமையான தமிழுக்காக மட்டுமல்ல, பெண் விடுதலை கருத்துக்களைக் அளித்ததற்காகவும் ஆண்டாளை கொண்டாடுகிறேன். தன் பேச்சு தற்காலச் சூழலுடன் பொருத்தி தவறாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆராய்ச்சியை மேற்கோள் காட்டியே பேசினேன். அதை எல்லாரும் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்வதற்காகவும் மீண்டும் என்னைத் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.” என்றார்.

இதனிடையே, இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், வைரமுத்து ஆண்டாளைப் பற்றிய வேறொருவரின் ஆய்வைத்தான் மேற்கோள் காட்டியுள்ளார் என்றும் அதில் தவறு இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி