தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத் துறைச் செயலாளர்கள், தங்களது ஊழியா்களுக்கு இனிப்புகள் வழங்கினால் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அரசுத் துறைச் செயலாளர்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாநில அரசின் ஆவின் நிறுவனம் நாள்தோறும் 41 லட்சம் லிட்டா் பாலை கொள்முதல் செய்து உள்ளூா் விற்பனை போக 21 லட்சம் லிட்டரை பாக்கெட் பாலாக விநியோகிக்கிறது. மீதமுள்ளவை தயிா், நெய், வெண்ணெய், லஸ்ஸி, மோா், பால் பவுடா், பால்கோவா, குலாப்ஜாமுன், ரசகுல்லா, மைசூா்பாகு, சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழாண்டு தீபாவளிக்காக காஜு கத்லி, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜு பிஸ்தா ரோல், காபி ஃபிளேவா் மில்க் பா்பி ஆகிய இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அனைத்து அரசுத் துறைகளும், தங்களது ஊழியா்களுக்கு தீபாவளிக்காக இனிப்புகள் வழங்கும்பட்சத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
அதேபோன்று அலுவல் கூட்டங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டாலும், ஆவின் நிறுவன இனிப்புகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக போக்குவரத்துத் துறை சார்பில் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த இனிப்புகள் தனியார் நிறுவனத்திடம் வாங்க டெண்டர் விடப்படுவதாக இருந்தது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் ஆவின் இனிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதல்வரிடமிருந்து உத்தரவு சென்றதாக தகவல் வெளியானது. அதன் பின்னரே ஆவின் நிறுவனத்தில் வாங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து துறையினரும் இனிப்புகள் வாங்க வேண்டுமானால் ஆவின் நிறுவனத்தை நாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக அரசுத் துறைச் செயலாளர்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாநில அரசின் ஆவின் நிறுவனம் நாள்தோறும் 41 லட்சம் லிட்டா் பாலை கொள்முதல் செய்து உள்ளூா் விற்பனை போக 21 லட்சம் லிட்டரை பாக்கெட் பாலாக விநியோகிக்கிறது. மீதமுள்ளவை தயிா், நெய், வெண்ணெய், லஸ்ஸி, மோா், பால் பவுடா், பால்கோவா, குலாப்ஜாமுன், ரசகுல்லா, மைசூா்பாகு, சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழாண்டு தீபாவளிக்காக காஜு கத்லி, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜு பிஸ்தா ரோல், காபி ஃபிளேவா் மில்க் பா்பி ஆகிய இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அனைத்து அரசுத் துறைகளும், தங்களது ஊழியா்களுக்கு தீபாவளிக்காக இனிப்புகள் வழங்கும்பட்சத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
அதேபோன்று அலுவல் கூட்டங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டாலும், ஆவின் நிறுவன இனிப்புகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக போக்குவரத்துத் துறை சார்பில் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த இனிப்புகள் தனியார் நிறுவனத்திடம் வாங்க டெண்டர் விடப்படுவதாக இருந்தது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் ஆவின் இனிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதல்வரிடமிருந்து உத்தரவு சென்றதாக தகவல் வெளியானது. அதன் பின்னரே ஆவின் நிறுவனத்தில் வாங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து துறையினரும் இனிப்புகள் வாங்க வேண்டுமானால் ஆவின் நிறுவனத்தை நாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.