ஆப்நகரம்

ஆட்டோ, டாக்ஸி ஒட்டுநர்களுக்கு உதவும் ஆவின் நிறுவனம்: புதிய முயற்சி

ஆட்டோ, டாக்ஸி ஒட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க புதிய முயற்சி ஒன்றை ஆவின் நிறுவனம் மேற்கொண்டுள்ளது

Samayam Tamil 23 Jul 2020, 7:13 pm
பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆவின். தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், தற்போதைக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் இந்நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வரூகிறது.
Samayam Tamil பணி நியமனம்
பணி நியமனம்


ஆவின் நிறுவனத்தில் முகவர்களாவதற்கு ரூ.10,000 வைப்பு தொகையாக இருந்த நிலையில், கொரோனாவுக்கு பின்பான காலகட்டத்தில் அது ரு.1,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆவின் பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில், கொரோனாவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா ஃபார்முலா... லாக்டவுன் முழுமையாக ரத்து... ரெடியாகும் தமிழகம்!

ஆவின் அறிவிப்பு


கொரனா வைரஸ் பரவலால் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,அவர் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதல்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆவின் நிறுவனம், அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000 வைப்புத்தொகையாக செலுத்தி உடனடியாக நாடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி