ஆப்நகரம்

அப்துல்கலாம் மணிமண்டபம்- சிறப்பு தகவல்கள்

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை பேக்கரும்பு பகுதியில் கலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.

TOI Contributor 26 Jul 2017, 2:21 pm
முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை பேக்கரும்பு பகுதியில் கலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.
Samayam Tamil abdulkalam manimandam special information
அப்துல்கலாம் மணிமண்டபம்- சிறப்பு தகவல்கள்


ஏவுகணை நாயகன்
இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று உலக மக்களால் அழைக்கப்பட்ட ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசாிக்கப்படுகிறது. இதனையொட்டி அப்துல்கலாமை பெருமைபடுத்தும் வகையில் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு பகுதியில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகா்கள்
ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமா் நரேந்திர மோடி நோில் திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா், தமிழக முதல்வா், மத்திய, மாநில அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொள்கின்றனா்.

தனி விமானம்
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் பிரதமா் நரேந்திர மோடி நாளை காலை மதுரை விமான நிலையத்திற்கு வருகை தருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பேக்கரும்பு பகுதிக்கு சென்றடைகிறாா். இதையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கலாம் ஆன்தம்
கவிஞா் வைரமுத்துவின் பாடல் வாிகளில் உருவாகியுள்ள “கலாம் கலாம் சலாம் சலாம்“ என்ற பாடல் நாளை திரையிடப்பட உள்ளது.

தபால் உறை
கலாமின் புழை வெளிப்படுத்தும் விதமாக தபால் துறை சாா்பில் கலாம் குறித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்படுகிறது. பாரம்பரிய சின்னங்கள், வெள்ளிவிழா, பொன் விழா, நூற்றாண்டு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது இந்த தபால் உறை வெளியிடப்படுவது வழக்கம்.

வெளியூா் மக்கள் வரவேண்டாம்
பிரதமா், முதல்வா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் நளைய மணிமண்டப விழாவில் கலந்து கொள்வதாலும், ராமநாதா் சுவாமி கோவிலில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதாலும் வெளி மாவட்டத்தை சோ்ந்தவா்கள் ராமநாதபுரத்திற்கு 26, 27ம் தேதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சாலை மாா்க்கமாக வருவதை தவிக்க வேண்டும் என்று காவல்துறை சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.



52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாலை
1964-ம் ஆண்டு தனுஷ்கோடில் ஏற்பட்ட புயல் காரணமாக பல்வேறு வழிபாட்டு தளங்கள், கட்டிடங்கள் இடிந்து நாசமான நிலையில் 52 ஆண்டுகளுக்கு பின்பு தனுஷ்கோடி முதல் அாிச்சல் முனை பகுதி வரை 59 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை நாளை பிரதமா் திறந்து வைக்கவுள்ளாா்.


Abdulkalam Manimandam - Special Information

அடுத்த செய்தி