ஆப்நகரம்

குழந்தைகளைக் கொன்ற அபிராமி, மியுசிக்கலியில் கள்ளக்காதலனுடன் டப்ஸ்மேஷ்!!

சென்னையில் பெற்றக் குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொன்ற அபிராமி, அவரது கள்ளக்காதலனுடன் மியூசிக்கலியில் செய்த டப்ஸ்மேஷ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 6 Sep 2018, 12:54 pm
சென்னையில் பெற்றக் குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொன்ற அபிராமி, அவரது கள்ளக்காதலனுடன் மியூசிக்கலியில் செய்த டப்ஸ்மேஷ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil குழந்தைகளைக் கொன்ற அபிராமி, மியுசிக்கலியில் கள்ளக்காதலனுடன் டப்ஸ்மேஷ்!!
குழந்தைகளைக் கொன்ற அபிராமி, மியுசிக்கலியில் கள்ளக்காதலனுடன் டப்ஸ்மேஷ்!!


சென்னை அருகே உள்ள குன்றுத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வரும் இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும், அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

வேலை காரணமாக விஜய்யால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வரமுடியவில்லை. இதையடுத்து, அடுத் நாள் அதிகாலை வீடு திரும்பிய அவர், தனது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், தாய் அபிராமி பிரியாணிக் கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்ற ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதும், இதனால் கணவன்-மனைவி இடையே சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ குழந்தையைக் கொன்றது அம்பலமானது. பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸார் தலைமறைவாக இருந்த அபிராமி மற்றும் சுந்தரம் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், அபிராமி மியுசிக்கலி எனும் அப்பில் மிகவும் ஆக்டிவாக இருந்தது தெரியவந்துள்ளது. அதில், அவர் பல்வேறு டப்ஸ்மேஷ்களையும் செய்துள்ளார்.குறிப்பாக, அவரின் கள்ளக்காதலனான சுந்தரத்துடன் அவர் செய்துள்ள டப்ஸ்மேஷ் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி