ஆப்நகரம்

ஒரே நாளில் 1, 80, 000 பேர் சென்னைவிட்டு சொந்த ஊருக்கு பயணம்!

சென்னையில் நேற்றும் மட்டும் 1, 80, 000 மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

TNN 17 Oct 2017, 1:21 pm
சென்னையில் நேற்றும் மட்டும் 1, 80, 000 மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
Samayam Tamil about 1 80 000 people went their home town for diwali
ஒரே நாளில் 1, 80, 000 பேர் சென்னைவிட்டு சொந்த ஊருக்கு பயணம்!


சென்னை நகரம் என்பது சென்னை வாசிகளுக்கு சொந்தமான நகரம் என்றால் அது இல்லை என்றுதான் கூற முடியும், இங்கு வந்து குடியேரியவர்கள்தான் அதிகம் . சென்னையில் பிறந்தவர்கள் என்றால் குறிப்பிட்ட சில லட்சம் மக்களே அதில் வருவார்கள் .

வந்தேரிகளுக்கு ஒரு நகரத்தையே விட்டுதந்த பெருய மனசுக்காரர்கள் சென்னை வாசிகள். சென்னைக்கு வந்தவர்கள் யாராலும் எளிதில் சென்னையை விட்டு செல்ல முடியாது என்று கூறினாலும் . தீபாவளி , பொங்கல் , இப்படி பண்டிகை நாட்களில் மட்டும்தான் தங்களின் சொந்த ஊருக்கு மக்கள் செல்கின்றனர்.

தீபாவளி என்றாலே சென்னையில் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது, எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் , அது மக்களுக்கு போதியதாக இல்லை . நேற்றும் மட்டும் 1, 80, 000 பேர் சென்னையை விட்டு தனது சொந்த ஊருக்கு சென்றிருகின்றனர்.

இதனால் சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிற்பதற்கு கூட இடமில்லா நிலை ஏற்பட்டுள்ளது .

about 1, 80, 000 people went their home town for diwali

அடுத்த செய்தி