ஆப்நகரம்

சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு... 200க்கும் மேற்பட்டோர் கீழிறங்க முடியாமல் தவிப்பு...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Samayam Tamil 10 Nov 2019, 8:29 am
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
Samayam Tamil sathuragiri


ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்டு உள்ளது. இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்காமல் மலைக்கோவிலியே தங்கியுள்ளனர்.

மேலும், 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கிலி பாறை பகுதியில் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தீயணைப்புத் துறையினர், வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.

இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மலைக்கு மேலே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி