சென்னை: காட்டு யானைகளை வேட்டையாடிய கும்பலில் ஒருவரான வனராஜ் என்பவரை விரைவில் கைது செய்யவுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று காட்டு யானைகளை வேட்டையாடியது தொடர்பாக கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தலைமறைவாக இருக்கும் வனராஜ் என்பவர் விரைவில் கைதாகவுள்ளதாக மதுரை வனத்துறை பாதுகாவலர் நிஹார் ரஞ்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தேனியைச் சேர்ந்த வேட்டைக்காரரான மணி என்பவர் திருப்பூரில் கைதானார். கடந்த சில மாதங்களாகவே மணியின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்ததாகவும், அவர் திருப்பூர் அருகே இருப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்டார் எனவும் நிஹார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மணி குறித்து விசாரணை நடத்தியதில், பல்வேறு வேட்டை சம்பவங்களில் இவர் நேரடியாக ஈடுபட்டதாகவும், வேட்டையாடும் வன விலங்குகளின் தந்தங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 10 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் கடத்தப்பட்டதில் மணிக்கு சர்வதேச அளவில் தொடர்புடையதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே மணி அளித்த தகவலின் பெயரில் அந்த கும்பலில் உள்ள பாபு என்பவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று காட்டு யானைகளை வேட்டையாடியது தொடர்பாக கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தலைமறைவாக இருக்கும் வனராஜ் என்பவர் விரைவில் கைதாகவுள்ளதாக மதுரை வனத்துறை பாதுகாவலர் நிஹார் ரஞ்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தேனியைச் சேர்ந்த வேட்டைக்காரரான மணி என்பவர் திருப்பூரில் கைதானார். கடந்த சில மாதங்களாகவே மணியின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்ததாகவும், அவர் திருப்பூர் அருகே இருப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்டார் எனவும் நிஹார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மணி குறித்து விசாரணை நடத்தியதில், பல்வேறு வேட்டை சம்பவங்களில் இவர் நேரடியாக ஈடுபட்டதாகவும், வேட்டையாடும் வன விலங்குகளின் தந்தங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 10 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் கடத்தப்பட்டதில் மணிக்கு சர்வதேச அளவில் தொடர்புடையதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே மணி அளித்த தகவலின் பெயரில் அந்த கும்பலில் உள்ள பாபு என்பவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.