ஆப்நகரம்

சென்னை பாடி மேம்பாலத்தில் கோர விபத்து: 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்

நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் திரும்பிய நண்பர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

Samayam Tamil 3 Nov 2019, 5:57 pm
சென்னை: சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil accident


வில்விவாக்கத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (20), இவரது நண்பர்கள் விஜய் (17), சதீஷ் (17). இவர்கள் மூவரும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் திருமங்கலம் பாடி மேம்பாலம் மீது அதிவேகமாக வந்துள்ளனர்.

குளவியால் உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ..?

அப்போது, மேம்பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது எதிர்பாரா விதமாக இவர்கள் வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் திருமங்கலம் போக்குவரத்து போலீசாருக்கு விபத்து குறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

சென்னை: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து; நடத்துநர் பலி, 15 பேர் காயம்!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் ஹரி மற்றும் உதவி ஆய்வாளர் கலைமணி மற்றும் போலீசார் விஜயின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பிரசாந்த், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சென்னை: நடுவானில் அதிர்ச்சி..! பெண் பயணி மாரடைப்பால் மரணம்..

இதில் படுகாயமடைந்த மற்றொரு நபரான சதீஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி