ஆப்நகரம்

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Feb 2021, 12:15 pm
பிப்ரவரி 28 (இன்று) முதல் மார்ச் 4 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamil nadu weather


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, நாமக்கல், கருர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் .

திமுக 170 - அதிமுக 170: ஸ்டாலினுக்கு டெல்லி கொடுத்த ஷாக்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு மக்கள் நலக் கூட்டணி? திமுகவுக்கு புதிய தலைவலி!

வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஒருபுறம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் அதிகாலை நேரத்தில் பனிப் பொழிவு அதிகமாக உள்ளது.

அடுத்த செய்தி