ஆப்நகரம்

ஆட்டம் ஓய்ந்தது.. இனி இப்படி தான் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Jan 2022, 12:58 pm
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக இம்முறை மாநிலம் முழுவதும் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டது.
Samayam Tamil rain


குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நவம்பர் மாதம் கனமழை புரட்டி எடுத்தது. விவசாய பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தன. நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் எதிர்பாராதவிதமாக கொட்டித் தீர்த்த கனமழை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆன்லைன் வகுப்புக்கும் விடுமுறையா? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
ஜனவரியிலும் சில இடங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்திய கூறுகள் தெரிவிதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், “வடகிழக்கு பருவமழை நாளை (22.02.2022) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.

21.01.2022 முதல் 25.01.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: இடைக்கால தடைக்கு நோ சொன்ன நீதிபதிகள்!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி