ஆப்நகரம்

மருத்துவமனை மயக்க மருந்துகளை திருடி போதைக்காக விற்ற ஆசாமி கைது!

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்துக்கு பயன்படுத்தும் மருந்துகளை திருடி போதைக்காக விற்ற ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 2 Feb 2019, 11:13 pm
கோவை :கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்துக்கு பயன்படுத்தும் மருந்துகளை திருடி போதைக்காக விற்ற ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil Drugist


கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை செயல் பட்டு வருகின்றது. இங்கு சிகிச்சை பெற வரும் நபர்களுக்கு வலி நிவாரணி, அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பயன்படுத்தும் மருந்துகளை திருடி போதைக்காக விற்ற ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

மோகன்ராஜ் வயது 45 சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். மற்றொரு ஆசாமியான செல்வராஜ். மோகன் ராஜிடம் இருந்து மயக்க மருந்துகளை 10 ரூபாய்க்கு வாங்கி இதனை கல்லூரி மாணவர்களுக்கு 200 ரூபாய்க்கு விற்றுள்ளனர் செல்வராஜ்.

இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதை அறிந்து வந்த போலீஸார் விசாரணையில் மோகன்ராஜ் கைது செய்யபட்டு அவர் வைத்திருந்த மருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்வராஜ் தப்பி ஓடியுள்ளார்.

பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர் போதைப் பொருள் சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி