ஆப்நகரம்

நூல் விலை உயர்வு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

Samayam Tamil 16 May 2022, 10:44 am
கொரோனா ஊடரங்கு காலத்தில் முடங்கிப்போன பின்னலாடைத் தொழில் தற்போது நூல் விலை உயர்வு மேலும் பாதிப்படைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்தது. பஞ்சு விலை ஒரே ஆண்டில் 2 மடங்கு உயர்ந்து ஒரு கேண்டி ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்திருப்பதால் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்


நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள், பின்னலாடை நிறுவனங்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இன்றும், நாளையும் நடைபெறும் போராட்டத்தில் கோடிக்கணக்கான வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட்? எடப்பாடி போடும் கணக்கு!
தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் தமிழக ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி