ஆப்நகரம்

ராஜேந்திர பாலாஜிமீது நடவடிக்கை எடுக்க மநீம துணைத் தலைவர் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், கட்சியின் பொதுச்செயலாளர் திரு ஆ. அருணாச்சலம் ஆகியோர் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.

Samayam Tamil 20 May 2019, 8:03 pm
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், கட்சியின் பொதுச்செயலாளர் திரு ஆ. அருணாச்சலம் ஆகியோர் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து, தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்மீது வன்முறையைத் தூண்டும் வகையில் விசமச் செய்திகளையும் பரப்பி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.
Samayam Tamil rajendra balaji


கட்சியின் வழக்கறிஞர் பாஸ்கர் அவர்களும் செயற்குழு உறுப்பினர் திரு. ஆர்.ரங்கராஜன் (முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்) அவர்களும் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது பேட்டியில் ’மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது என அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

இந்து மதம் ஆண்டாண்டு பழமையானது. முதன்மையான மதம். கேதர்நாத்தில் உள்ள சிவாலயம் பாண்டவர்கள் வழிபட்டது. அந்த அளவுக்கு இந்து மதம் மிகவும் தொன்மையானது.

இந்தியாவுக்கு வந்தவர்களும், ஆள வந்தவர்களும், வாழ வந்தவர்களும் இந்து மதத்தின் சிறப்புகளை அழிக்க முற்பட்டனர். அதையெல்லாம் தாண்டி இந்துமதம் தழைத்தோங்கி உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி