ஆப்நகரம்

கொரோனாவுக்கு மருந்து இருக்குன்னு சொன்னவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!

கொரோனாவுக்கு தம்மிடம் மருந்து இருப்பதாக கூறி வந்ததால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள போலி சித்த மருத்துவர் தணிகாச்சலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Samayam Tamil 21 May 2020, 5:22 pm
தணிகாச்சலம் என்பவர் தன்னை சித்த மருத்துவர் என அடையாளப்படுத்திக் கொண்டு கடந்த சில மாதங்களாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
Samayam Tamil siddha doctor


அவர் வெளியிட்ட வீடியோக்களில், "கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தம்மிடம் மருந்து இருப்பதாகவும், ஏன் அதை அரசு ஏற்க மறுக்கிறது" என்றும் குற்றம்சாடடி வந்தார்.

ஆனால் அவரை போலி சித்த மருத்துவர் என்று சித்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அத்துடன், தம்மிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதித்து வருவதாக, தணிகாச்சலம் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தணிக்காச்சலம் போலி சித்த மருத்துவராம், மருந்துலாம் இல்லையாம் போலீஸ் தகவல்...

இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தணிகாச்சலத்தை கடந்த 6 ஆம் தேதி கைது செய்து. நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று (மே 21) உத்தரவிட்டுள்ளார்.

தணிகாச்சலத்தின் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி