ஆப்நகரம்

முகிலனை காணவில்லை: நோட்டீஸ் ஒட்டி தேடும் சிபிசிஐடி

சமூகஆா்வலா் முகிலன் மாயமாக ஒருமாதமாகும் நிலையில், முகிலனை காணவில்லை என்று சிபிசிஐடி காவல் துறையினா் பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.

Samayam Tamil 14 Mar 2019, 5:54 pm
சமூகஆா்வலா் முகிலனை காணவில்லை என்று சிபிசிஐடி பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
Samayam Tamil Mugilan

கூடங்குளம் அணு உலை எதிா்ப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவா் சமூக ஆா்வலா் முகிலன்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவா், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி சென்னை பத்திாிகையாளா் மன்றத்தில், ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த சில ஆதாரங்களை வெளியிட்டாா்.

செய்தியாளா் சந்திப்புக்குப் பின்னா் மதுரை செல்வதற்காக எழும்பூா் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை. முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனைத் தொடா்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முகிலனை காணவில்லை என்று சிபிசிஐடி காவல் துறையினா் ஆங்காங்கே நோட்டீஸ் ஒட்டியுள்ளனா். அவரது அங்க அடையாளங்களை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் முகிலன் குறித்து தகவல் தொிந்தவா்கள் 044 28513500 என்ற தொலைபேசி எண் மூலம் தகவல் தொிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி