ஆப்நகரம்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு கைகொடுத்த நடிகர்!

பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நடிகர் அபி சரவணன் ஒரு லட்சம் பணமும், ஒரு பசு மற்றும் கன்றுக்குட்டியை கொடுத்து உதவி செய்துள்ளார்

Samayam Tamil 20 Jan 2018, 1:35 am
பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நடிகர் அபி சரவணன் ஒரு லட்சம் பணமும், ஒரு பசு மற்றும் கன்றுக்குட்டியை கொடுத்து உதவி செய்துள்ளார்.
Samayam Tamil actor abi saravanan helped the family of dindugal teenager who died in jallikattu
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு கைகொடுத்த நடிகர்!


பொங்கல் தினத்தை முன்னிட்டு, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. உலகப்புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண பல்லாயிர மக்கள் அங்கு குவிந்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த திண்டுக்கலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக மாடு முட்டி உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவத்தையடுத்து, அவரின் குடும்பத்திற்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திய கமிட்டியாரும்,அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என அவரின் நண்பர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நடிகர் அபி சரவணன் அந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் பணமும், ஒரு பசு மற்றும் கன்றுக்குட்டியையும் கொடுத்து உதவிசெய்துள்ளார். அந்த இளைஞரின் குடும்பத்தில் அவரின் தாய் மற்றும் தங்கை இருவர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி