சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வழக்கு தொடர்ந்த பீட்டா காலில் விழுங்க என ஆனந்தராஜ் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்துள்ள பீட்டாவிடம், வழக்கை வாபஸ் பெற விருப்பு வெறுப்பின்றி சொல்லி, ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஆனந்த்ராஜ் கூறியது:
ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் பேரணி நடத்தியது நல்ல தொடக்கம். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த போராட்டம் நடத்த நல்ல நேரம் இது. ஜல்லிக்கட்டு நம் ரத்தத்தோடு கலந்த வீர விளையாட்டு.
இது விளையாட்டுதான், இதில் துன்புறுத்தல் குறைவுதான். இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இப்பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அமைப்பான பீட்டாவிடம் நாம் எல்லோரும் சேர்ந்து பேசி இந்த வழக்கை வாபஸ் பெற கேட்க வேண்டும்.
இந்த பிரச்சனையை சட்டப்படி அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். அதனால் பீட்டாவிடமே கேட்பது தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்துள்ள பீட்டாவிடம், வழக்கை வாபஸ் பெற விருப்பு வெறுப்பின்றி சொல்லி, ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஆனந்த்ராஜ் கூறியது:
ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் பேரணி நடத்தியது நல்ல தொடக்கம். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த போராட்டம் நடத்த நல்ல நேரம் இது. ஜல்லிக்கட்டு நம் ரத்தத்தோடு கலந்த வீர விளையாட்டு.
இது விளையாட்டுதான், இதில் துன்புறுத்தல் குறைவுதான். இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இப்பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அமைப்பான பீட்டாவிடம் நாம் எல்லோரும் சேர்ந்து பேசி இந்த வழக்கை வாபஸ் பெற கேட்க வேண்டும்.
இந்த பிரச்சனையை சட்டப்படி அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். அதனால் பீட்டாவிடமே கேட்பது தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.