ஆப்நகரம்

நான் தப்பா பேசிட்டேன்: என்னை மன்னிச்சிருங்க: அந்த பல்டி அடித்த கருணாஸ்!

போலீஸ் துணை கமிஷனரை ஒருமையில் பேசியதற்காக நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Samayam Tamil 20 Sep 2018, 12:09 pm

ஹைலைட்ஸ்:

போலீஸ் துணை கமிஷனரை ஒருமையில் பேசியதற்காக நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil karunas
போலீஸ் துணை கமிஷனரை ஒருமையில் பேசியதற்காக நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் திநகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நீ கொலை கூட பண்ணு, அதனை சொல்லிட்டு பண்ணு. ஒரு நியாய தர்மம் இருக்க வேண்டும். என் ஜாதிகாரன் மேல கைய வச்சா கைய கால உடைச்சிருவேன். உன்னுடைய சட்டைய கழட்டிட்டு வா, நீயா நானானு பாத்துருவோம் என்று வசமாக வச்சு செய்துள்ளார். நாங்க எல்லாம், தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கூட கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று பேசியுள்ளார்.

இதையடுத்து, ஒரு போலீஸ் துணை கமிஷனரை இவ்வாறு மிரட்டும் தோணியில் பேசியதற்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், ஏதோ, ஆதங்கத்திலும், ஆத்திரத்திலும் பேசிவிட்டதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி