ஆப்நகரம்

அறம் சார்ந்த அறிவை கற்று தரும் ஆசிரியர்கள் தேவை - கமல்ஹாசன்

ஆசிரியர் தினமான இன்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

Samayam Tamil 5 Sep 2019, 5:50 pm
இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவரான டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தமிழகத்தில் இருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால் சிறப்பு விருதினை பெற்றுள்ளனர்.
Samayam Tamil 17


தேசத்தை கட்டமைக்க ஊன்றுகோலாக இருக்கும் ஆசிரியர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

ஆசிரியர் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார். தனது பாணியில் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கும் இவரின் கருத்து தற்போது வைரலாகியுள்ளது.

இன்று ஆசிரியர்கள் தினம்; இதன் சிறப்புகள் என்ன? ஏன் கொண்டாடப் படுகிறது தெரியுமா?

அதில் கூறியுள்ளதாவது: ''கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்''.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்: எழுத்தறிவித்த இறைவனை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வாழ்த்துங்கள்

கமல்ஹாசன் கூறியுள்ளது போல செல்போன் வைத்திருக்கும் இன்றைய தலைமுறையினர் கைக்குள் உலகத்தை அடக்கியுள்ளதாக நினைத்துள்ளனர். கிடைக்கப்பெறா விடைகளை இணையத்தில் தேடும் இவர்கள் அந்த விடைகாண கேள்வியை உருவாக்கியதே ஆசிரியர்கள் என்பதை நினைத்து பார்க்கவேண்டும்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!

அடுத்த செய்தி