திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை எனும் அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இதனிடையே, முக்குலத்தோர் புலிப்படை மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளராக நடிகரும், 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவருமான பாலாஜி முருகதாஸ் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார்.
அதேபோல், முக்குலத்தோர் புலிப்படை சென்னை மண்டல கலை இலக்கிய அணி அமைப்பாளராக (மகளிர் பிரிவு) நடிகையும், மாடலுமான ஏஞ்சலினா ஜானியும் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்குமாறு அக்கட்சி தலைமை கேட்டுக் கொண்டிருந்தது.
ஈ.பி.எஸ்., சசிகலா, பாஜக தரப்பில் தூது: என்ன செய்யப் போகிறார் ஓ.பி.எஸ்.!
இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படை அண்மையில் இணைந்த பாலாஜி முருகதாஸ் மற்றும் ஏஞ்சலினா ஜானி ஆகிய இருவரும் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோவில், “ஏஞ்சல் மீது கைய வச்சா கொண்டேபுடுவேன்” என்று சினிமா வசனம் ஒன்றை பாலாஜி முருகதாஸ் பேசுகிறார்.
மற்றொரு வீடியோவில் நீச்சல் குளத்திற்குள் நின்று கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸ், ஏஞ்சலினா ஜானியை தலைகு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் வகையில் உள்ளது. இந்த வீடியோக்கள் அனைத்தும் ஏஞ்சலினா ஜானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, முக்குலத்தோர் புலிப்படை மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளராக நடிகரும், 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவருமான பாலாஜி முருகதாஸ் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார்.
அதேபோல், முக்குலத்தோர் புலிப்படை சென்னை மண்டல கலை இலக்கிய அணி அமைப்பாளராக (மகளிர் பிரிவு) நடிகையும், மாடலுமான ஏஞ்சலினா ஜானியும் சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்குமாறு அக்கட்சி தலைமை கேட்டுக் கொண்டிருந்தது.
ஈ.பி.எஸ்., சசிகலா, பாஜக தரப்பில் தூது: என்ன செய்யப் போகிறார் ஓ.பி.எஸ்.!
இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படை அண்மையில் இணைந்த பாலாஜி முருகதாஸ் மற்றும் ஏஞ்சலினா ஜானி ஆகிய இருவரும் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோவில், “ஏஞ்சல் மீது கைய வச்சா கொண்டேபுடுவேன்” என்று சினிமா வசனம் ஒன்றை பாலாஜி முருகதாஸ் பேசுகிறார்.
மற்றொரு வீடியோவில் நீச்சல் குளத்திற்குள் நின்று கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸ், ஏஞ்சலினா ஜானியை தலைகு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் வகையில் உள்ளது. இந்த வீடியோக்கள் அனைத்தும் ஏஞ்சலினா ஜானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.