ஆப்நகரம்

Rajinikanth: நடிகா் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்களை மன்றத்தின் மூலமாக நடிகா் ரஜினிகாந்த் வழங்கவுள்ளாா்.

Samayam Tamil 20 Nov 2018, 2:52 pm
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடிகா் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை தனது மக்கள் மன்றம் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Rajinikanth Press Meet


கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதனைத் தொடா்ந்து முதல்வா் பழனிசாமி இன்று புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தாா். புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வா் கோாிக்கை விடுத்துள்ளாா்.

அதன்படி நடிகா் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றம் வாயிலாக ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளாா். இது தொடா்பாக ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டா் பதிவில், “நம் அன்புத்தலைவர் திரு. ரஜினிகாந்த் தன்னுடைய சார்பில் ரூபாய். 50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைவரின் விருப்பப்படி நாளை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். நிவாரணப் பொருட்களை மன்றக் காவலர்கள் மூலமாக பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஒப்படைத்த நம் அன்புத் தலைவருக்கு நன்றி” என்று பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகா் சிவக்குமாரின் குடும்பத்தினா், சிவகாா்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோா் நிவாரணத் தொகை, பொருட்களை வழங்கியுள்ளனா். இதே போன்று நடிகா் விஜய் தனது ரசிகா்மன்றம் வாயிலாக நிவாரணத் தொகையை வழங்கியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி