ஆப்நகரம்

அரசியல் பயணம்: நாளை மனம் திறக்கும் ரஜினி!!

நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமான பத்திரிகையாளர் சந்திப்புக்கு நாளை (மார்ச் 12) அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2020, 6:57 pm
தமது அரசியல் பயணம் குறித்த முக்கிய முடிவுகளை ரஜினிகாந்த் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil அரசியல் பயணம் : நாளை மனம் திறக்கும் ரஜினி!!


ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் அவர் மீண்டும் நாளை (வியாழக்கிழமை) சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.

ரஜினிகாந்த்: ஏப்ரல் 14ஆம் தேதி புதிய கட்சி?

அதைத்தொடர்ந்து காலை 10: 30 மணியளவில் பத்திரிகையாளர்களையும் அவர் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது தமது அரசியல் பயணம் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகளை ரஜினிகாந்த் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினி தமது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். அதன் பிறகு, போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்தில் அவ்வபோது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், அதிகாரபூர்வமான பத்திரிகையாளர் சந்திப்புக்கு நாளை ரஜினி அழைப்பு விடுத்துள்ளார்.

மீண்டும் மாவட்டச் செயலாளர்களை அழைக்கும் ரஜினி: இந்த தடவை அறிவிச்சுடுவாருல?

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல் லீலா பேலசில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது, மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான அண்மை சந்திப்புக்கு பிறகு, "ஒரு விஷயத்தில் மட்டும் தமக்கு ஏமாற்றம் இருக்கிறது" என்று செய்தியாளர்களிடம் ரஜினி தெரிவித்திருந்தார்.

அந்த ஒரு விஷயம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி