ஆப்நகரம்

எச்.ராஜா மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சத்யராஜ் வலியுறுத்தல்

பெரியார் சிலை அகற்றப்படும் என பதிவிட்ட எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 7 Mar 2018, 9:31 am
பெரியார் சிலை அகற்றப்படும் என பதிவிட்ட எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil actor sathyaraj has condemned h raja comments on periyar statue
எச்.ராஜா மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சத்யராஜ் வலியுறுத்தல்


பாஜக கட்சி திரிபுராவில் வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவினர் திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலையை அகற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் தனது பேஸ்புக் பக்கத்தில், தற்போது திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்திலும் ஜாதி வெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பதிவிட்டார்.

எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இந்நிலையில், எச்.ராஜாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரியார் சிலையை உடைப்போம் என்ற கூறிய எச்.ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவி, ராணுவம் உள்ளிட்ட எந்த சக்தியாலும் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி