ஆப்நகரம்

பக்கபலமாக இருந்ததற்கு நன்றி - 'ஜெய்பீம்' சூர்யா நெகிழ்ச்சி!

'ஜெய்பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்

Samayam Tamil 17 Nov 2021, 5:51 pm
'ஜெய்பீம்' பட விவகாரத்தில், தங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Suriya.


இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளி வந்த திரைப்படம் 'ஜெய்பீம்'. இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக, ஓ.டி.டி.,யில் வெளியாகியது. இந்தத் திரைப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன், அமீர் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி, வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருப்பதாகக் கூறி வன்னியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. இதற்கு பின்னர் அந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, பெயர் அரசியலில் படத்தை சுருக்க வேண்டாம் என தெரிவித்தார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - தமிழக அரசு இப்படியொரு அறிவிப்பு!
இதைத் தொடர்ந்து, வன்னியர் சங்கங்களைச் சேர்ந்தோர் நடிகர் சூர்யாவை இழிவுபடுத்தியும், நஷ்ட ஈடு கேட்டும் தொடர்ந்து பிரச்னை செய்தனர். மேலும் சமூக வலைதளங்கள் முழுவதும் 'ஜெய்பீம்' படம் தொடர்பாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும், ஒட்டுமொத்த திரையுலகினரும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில், நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:


அன்பானவர்களே, 'ஜெய்பீம்' மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை, உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி