ஆப்நகரம்

'நொய்யலை நோக்கி' துவக்க விழாவில் அன்னா ஹசாரே, சூர்யா

கோவையின் முக்கிய நதியான நொய்யல் நதியை மீட்டு புனரமைக்கும் முயற்சியான 'நொய்யலை நோக்கி' நிகழ்ச்சி தொடங்கியது.

TNN 27 Mar 2016, 3:27 pm
கோவை: கோவையின் முக்கிய நதியான நொய்யல் நதியை மீட்டு புனரமைக்கும் முயற்சியான 'நொய்யலை நோக்கி' நிகழ்ச்சி தொடங்கியது.
Samayam Tamil actor surya and anna hazare on the launch event of noyyalai nokki
'நொய்யலை நோக்கி' துவக்க விழாவில் அன்னா ஹசாரே, சூர்யா


நாட்டில் உள்ள நதிகளை காக்க, அவற்றை புனரமைப்பதுடன் தொழில்நுட்ப ரீதியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டி கோவையில் உள்ள ஆலாந்துறையில் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற 'நொய்யலை நோக்கி' நிகழ்ச்சியில் மக்கள், அரசு, அரசு சாரா அமைப்புகள், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய மாற்றத்தை ஏற்படுத்தவும், வற்றிய நதிகளை மீட்டெடுக்கவும் தன்னார்வ அமைப்புகளின் திட்டமான 'நொய்யலை நோக்கி' தொடங்கி வைத்து பேசிய அன்னா ஹசாரே, 'கோவையின் ஜீவா நதியான நொய்யலை எங்கே தொலைத்தோம்? குப்பையைக் கொட்டி அழித்துவிட்டோம். எனவே மெல்ல மெல்ல புனரமைத்து, ஆண்டு முழுவதும் நீர் பெருக்கெடுக்கும் ஜீவ நதியாக மாற்ற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா கூறுகையில்,'சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் நதிகள், குட்டைகள் என அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தும் இன்று தண்ணீருக்காக அலைகிறோம். நமது நீர் நிலைகளை முறையாக காக்க நதிகளை புனரமைக்கும் இந்த 'நொய்யலை நோக்கி' முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயலபட வேண்டும். இந்த முயற்சியின் மூலம் நம்மால் முடிந்த மாற்றத்தை இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமாக காட்ட முடியும் என கூறினார்.

அடுத்த செய்தி