ஆப்நகரம்

தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

TNN 6 Dec 2017, 4:51 pm
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil actor vishal compliants to state chief election commissioner rajesh lakhoni
தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார்


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நேற்று சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, முதலில் பரிசீலனை செய்யப்பட்ட அவரது மனு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நடிகர் விஷால் நேரில் சந்தித்தார்.

அப்போது, மற்ற சுயேட்சை வேட்பாளர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய மனு மட்டும் பரிசீலினை செய்யும் போது நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி விஷாலிடம் உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி