சென்னை: நடிகர்கள் கட்சி தொடங்குவது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
ஆனால் அதனை நடத்துவது மிகவும் கஷ்டம். அதிமுக 45 ஆண்டுகளாக மக்கள் ஏற்றுக் கொண்ட கட்சியாக இருந்து வருகிறது. அதற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகள் தான் காரணம்.
கட்சி என்றால் கிளை அமைப்பு, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநகரம் வாயிலாக கிளைகள் வேண்டும். அதற்கு 10 ஆண்டுகளாவது வேண்டும்.
நடிகர்கள் கட்சி தொடங்குவது கால தாமதமான அறிவிப்பு. புதிதாக கட்சி தொடங்குவது தீபாவளி ரிலீஸ்போல ஒரு மாதம் மட்டுமே ஓடக்கூடிய சினிமா போன்றது.
ஆனால் அதிமுக அடிமைப்பெண் போன்றது. எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 40, 50 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Actors enter politics like movie released on Deepavali says Minister Rajendra Balaji.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
ஆனால் அதனை நடத்துவது மிகவும் கஷ்டம். அதிமுக 45 ஆண்டுகளாக மக்கள் ஏற்றுக் கொண்ட கட்சியாக இருந்து வருகிறது. அதற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகள் தான் காரணம்.
கட்சி என்றால் கிளை அமைப்பு, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநகரம் வாயிலாக கிளைகள் வேண்டும். அதற்கு 10 ஆண்டுகளாவது வேண்டும்.
நடிகர்கள் கட்சி தொடங்குவது கால தாமதமான அறிவிப்பு. புதிதாக கட்சி தொடங்குவது தீபாவளி ரிலீஸ்போல ஒரு மாதம் மட்டுமே ஓடக்கூடிய சினிமா போன்றது.
ஆனால் அதிமுக அடிமைப்பெண் போன்றது. எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 40, 50 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Actors enter politics like movie released on Deepavali says Minister Rajendra Balaji.