ஆப்நகரம்

பணத்தைக் குறியாகக் கொண்டவர்கள் நடிகர்கள்; எங்களைக் குற்றம் சொல்கிறார்களாம் - தமிழிசை அதிரடி!

திருவொற்றியூர்: அரசியல்வாதிகளை நடிகர்கள் எப்படி குற்றம் சொல்லலாம் என்று தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 15 Oct 2018, 4:30 am
சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவில் தேரோட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனைகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதே நடிகர்களின் குறிக்கோள்.
Samayam Tamil Tamilisai


இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளை குற்றம் சொல்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்கள் வாழ்வில் முக்கால்வாசி நேரத்தில் சம்பாதித்துக் கொண்டே இருந்த நடிகர்கள், நாட்டு மக்களுக்காக என்ன செய்தார்கள்.

எம்.ஜி.ஆருடன் நடிகர் கமல் ஹாசனை ஒப்பிடுவது வேடிக்கையானது. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக சாதித்த ஒரு மனிதர். கல்லூரிகள் கமல் ஹாசன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களிடம் அரசியல் செய்யக் கூடாது. அவர்கள் ஏற்கனவே புத்திசாலிகள். காங்கிரஸ் உடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்று போவார்கள் என்று தமிழிசை கூறியுள்ளார்.

Actors work for money only not like us says Tamilisai Soundararajan.

அடுத்த செய்தி