ஆப்நகரம்

அனாதையானதான உணர்கிறேன்: கலைஞர் மறைவு குறித்து குஷ்பு!

கலைஞர் கருணாநிதி மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு அனாதையானதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Aug 2018, 9:02 pm
சென்னை: கலைஞர் கருணாநிதி மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு அனாதையானதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kuspudmk123-1533654326


தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, கடந்த ஜூலை 18ல், உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.

இதையடுத்து கருணாநிதிக்கு நோய் தொற்று உருவானது. வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதைதொடர்ந்து, காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

நேற்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தொிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மறைவு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில்,
‘நான் அனாதையானதாக உணர்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

Actress cum congress spokesperson Khushbu tweeted that I feel I am orphaned

அடுத்த செய்தி