ஆப்நகரம்

பேனா சின்னம்; காயத்ரி ரகுராம் ட்விஸ்ட்.. உதயநிதி தாக்கப்பட்டார்..?

நடிகை காயத்திரி ரகுராம் கலைஞரின் பேனா சின்னம் குறித்தும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்தும் கருத்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 8 Feb 2023, 4:59 pm
சென்னை மெரினாவில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி செலவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil gayathri raghuram


இந்நிலையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதை குறித்து கருத்து கேட்பு கூட்டணி நடத்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணி துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான் எதிர்ப்பு

கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் கற்களை கொட்ட வேண்டும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பள்ளிக்கூடங்களை சீரமைக்க பணம் இல்லை பேனா சின்னத்துக்கு எங்க இருந்து காசு வருது. பேனா சின்னம் வைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவாலயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கடலில் வைப்பதை அனுமதிக்க முடியாது என்றார் சீமான். அப்போது திமுகவினர் கூச்சலிட்டு சீமானை பேச விடாமல் செய்தனர். இதனால் ஆவேசமான சீமான், ''கடலில் பேனாவை வைத்தால் நான் வந்து உடைப்பேன்'' என்று கூறினார். அது இன்றுவரை ஒருபக்கம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

'அப்பா பார்த்துக்கொள்வார்'... உதயநிதி சீக்ரெட்டை உடைக்கும் ஆபிசர்கள்..! நிச்சயம் ஆபத்து

காயத்ரி ரகுராம்

இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகியுள்ள நடிகை காயத்ரி ரகுராம் இது பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், ரெட் ஜெயண்ட் மற்றும் சன் பிக்சர்ஸ் மூலம் 100 கோடி பட்ஜெட் படங்களை எடுப்பதற்கு பதிலாக அவர்களால் பேனா கட்ட முடியும். ஆனால் பிரச்சனை இது அரசு இடம், அரசு திட்டம். அவர்கள் அதை சொந்தமாக்க முடியாது.

கடற்கரையில் இடத்துக்கு தனியார் நிறுவனத்தால் இடம் பெற முடியாது ஆனால் அரசாங்கத்தால் மட்டுமே முடியும் அதுதான் பிரச்சினை. பின்னர் கடற்கரையில் உள்ள இடம் அனைத்து தலைவர்களின் நினைவகத்திற்கும் இடமாக மாறும், நிரம்பிவிடும். பிரச்சினை பணத்தைப் பற்றியது அல்ல, அது இடத்தைப் பற்றியது'' என்று கூறியுள்ளார். பேனா சின்னம் அமைப்பதை நேரிடையாக எதிர்க்காமல் சுற்றி வளைத்து அவர் பேசியதாக பார்க்கப்படுகிறது. மேலும், சர்ச்சையில் இருந்து வரும் உதயநிதியின் ரெட் ஜியன்ட் நிறுவனம் பற்றியும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு முன்பு அவர் பேசியபோது, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான் என்று கூறியிருந்தார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி