ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை விவகாரம்: அமைச்சருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி!!

"கொரோனா சிகிச்சை விவகாரத்தில் டிவி நடிகர் வரதராஜன் மீது தோற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 8 Jun 2020, 8:17 pm
"சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை" என டிவி நடிகர் வரதராஜன் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.
Samayam Tamil kasthri


பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் ( ஜூன் 8) விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், "தமிழகம் முழுக்க மொத்தம் 75 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் உள்ள அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. ஆனால் டிவி நடிகரும், பத்திரிக்கையாளருமான வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார்.

பேரிடர் காலத்தில் டிவி நடிகர் வரதராஜன் தவறான கருத்தை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. அவர் மீது தோற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்து முறைமுக விமர்சிக்கும் விதத்தில், நடிகை கஸ்தூரி இன்று ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இரண்டு நாள் முன்பு எனக்கு தெரிந்த ஒரு அம்மையாரும் மருத்துவமனை தேடி அல்லாடிக்கொண்டிருந்தார். அரசு மருத்துவமனையில் இடமில்லையா இல்லை அவர் நாடவில்லையா ? தெரியவில்லை. எதுவாகினும் இனி அவர் எந்த தவறான தகவலும் பரப்ப வாய்ப்பு இல்லை" என கூறியுள்ளார்.


அத்துடன், தமது இந்த ட்விட்டர் பதிவை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டேக் செய்துள்ள கஸ்தூரி, "அம்பை நோவானேன்?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை தொடர்பான படுக்கை வசதிகள் குறித்து, டிவி நடிகர் வரதராஜன் கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நடிகை கஸ்தூரி ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி