ஆப்நகரம்

ஜெயலலிதா போன்ற துணிச்சல்மிகு தலைவரை இனி பார்க்க முடியாது: குஷ்பு புகழாரம்

ஜெயலலிதா போன்ற துணிச்சல்மிகு தலைவரை இனி பார்க்க முடியாது என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார்.

TNN 6 Dec 2016, 2:41 pm
சென்னை: ஜெயலலிதா போன்ற துணிச்சல்மிகு தலைவரை இனி பார்க்க முடியாது என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார்.
Samayam Tamil actress kushboo praised jayalaitha as bold lady
ஜெயலலிதா போன்ற துணிச்சல்மிகு தலைவரை இனி பார்க்க முடியாது: குஷ்பு புகழாரம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30க்கு காலமானார். அவருடைய உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், அவரைப் போல துணிச்சல் மிகுந்த தலைவரை எங்கும் பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா போன்ற தலைவர்கள் என்றுமே மறைவதில்லை என்றும், அவர் என்றும் நம்முடன் வாழ்வார் என்றும் குஷ்பு குறிப்பிட்டார்.

Actress Kushboo praised Jayalaitha as bold lady and she will live forever.

அடுத்த செய்தி