ஆப்நகரம்

நிலம் யாருக்கு சொந்தம்? நித்யானந்தா சீடர்களுடன் சேர்ந்து நடிகை ரஞ்சிதா மிரட்டல்!!

பல்லாவரத்தில் ரூ. 30 கோடி மதிப்புள்ள இடத்தை ஆட்டையைப் போட நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா சீடர்களுடன் வந்து மிரட்டலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பல்லாவரம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

TOI Contributor 17 May 2017, 6:45 pm
பல்லாவரத்தில் ரூ. 30 கோடி மதிப்புள்ள இடத்தை ஆட்டையைப் போட நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா சீடர்களுடன் வந்து மிரட்டலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பல்லாவரம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
Samayam Tamil actress ranjitha has threatedned land owner why
நிலம் யாருக்கு சொந்தம்? நித்யானந்தா சீடர்களுடன் சேர்ந்து நடிகை ரஞ்சிதா மிரட்டல்!!


பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கிராம நத்தம் ,11வது வார்டு, பச்சையம்மன் கோயில் தெருவில் 2 ஏக்கர் 19 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் கிருஷ்ணன் (67) கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது உறவினர்களுடன் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இதற்கிடையே இந்த இடத்தை சொந்தம் கொண்டாடி சென்னையைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ராமநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ராமநாதனால் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இந்த இடத்துக்கு நேற்று நித்யானந்தாவின் சீடர்கள் சிலர் நடிகை ரஞ்சிதாவின் தலைமையில் வந்து மிரட்டல் விடுத்துள்ளனர். கிருஷ்ணனிடம் பேசிய ரஞ்சிதா, ''இந்த இடம் ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. அந்த இடத்தை எங்களது மடத்திற்கு எழுதி வைத்து விட்டார். எனவே இந்த உடனே காலி செய்ய வேண்டும்'' என்று மிரட்டியுள்ளார். மேலும் அந்த இடத்தில் சிறிய குடிசை அமைத்து நித்யானந்தாவின் சீடர்கள் தங்கியுள்ளனர்.

இதையடுத்து இருதரப்பிலும் தற்போது பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Actress Ranjitha has threatedned land owner... why?

அடுத்த செய்தி