ஆப்நகரம்

Riyamikka Death: ரியாமிகாவின் தற்கொலைக்கு இதுதான் காரணம - காதலன் புதிய தகவல்

இளம் நடிகை ரியாமிகா தற்கொலை குறித்து அவரின் காதலனின் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 30 Nov 2018, 6:40 pm
சென்னை : இளம் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவரின் காதலனின் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil riyama


நடிகை ரியாமிகா ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்தவர். பின்னர் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் அவர் வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியாமிகா தற்கொலை செய்வதற்கு முன், நேற்று முன்தினம் இரவு காதலன் தினேஷை அவரின் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் வெலை காரணமாக தாமதமானதால் காலை வருவதாக தினேஷ் கூறிவிட்டார். இந்நிலையில் தான் ரியாமிகா தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.

ரியாமிகாவின் வருமானத்தை வைத்தே அவரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், வருமாணம் இன்றி பணத்திற்கு tஹவித்துவந்துள்ளார். அதே சமயம் காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்த ரியாமிகா தற்கொலை முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.

காதலனின் தகவல் :

இந்நிலையில் அவர் தற்கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் வெளியே யாருடனோ தங்கியிருக்கிறார். நான் செல்போனில் தொடர்பு கொண்ட போது கூட சரியாக பதிலளிக்கவில்லை என காதலன் தினேஷ் கூறியுள்ளார். வீட்டிற்கும் வரவில்லை. 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த போது தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதனால் அவர் யாருடன் தங்கியிருக்கியிருந்தார் என போலீஸார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என கண்ணீர் மல்க காதலன் தினேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி