ஆப்நகரம்

நடுரோட்டில் செய்தியாளருடன் சண்டை போட்ட பிரபல நடிகை!

நடிகை வனிதா பற்றிய செய்தி சேகரிக்க சென்றபோது, செய்தியாளரிடம் அவர் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2018, 6:12 pm
நடிகை வனிதா பற்றிய செய்தி சேகரிக்க சென்றபோது, செய்தியாளரிடம் அவர் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil vanitha fight


சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை படபிடிப்புக்காக அவர் அடிக்கடி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்நிலையில், விஜயகுமாரின் மகள் வனிதா படபிடிப்புக்காக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இதனையடுத்து படபிடிப்பு முடிந்த பின்னரும் வீட்டை விட்டு போகாமல் இருந்தாக கூறப்படுகிறது. முதலில் அன்பாக பேசிய விஜயக்குமார், பின்னர் கண்டிப்புடன் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை வனிதா, ‘இது என்னுடைய சொத்து. வீட்டை விட்டு போக முடியாது’ என்று கூறியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த விஜயகுமார், வனிதா மீது மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் குறித்து செய்தி சேகரிப்பதற்காக வனிதாவின் வீட்டுக்கு செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, செய்தியாளரை அவதூறாக பேசியதாக மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி