ஆப்நகரம்

ஊரடங்குனா என்ன, கவலையை விடுங்க: ஆம்னி பேருந்துகள் அட்டகாச அறிவிப்பு!

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 19 Apr 2021, 2:05 pm
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil omni buses


தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய நிலையில் நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. மேலும் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுகவுக்கு இத்தனை இடங்களா? ஐ பேக்கின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள போது தனியார், பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை . வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மிக தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்கமுடியாத சூழல் உருவானது. ஆனால் ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் மாற்று முறையை கையாள உள்ளது. அதாவது இரவு நேர ஊரடங்கு இருக்கும் போது பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சரவை பட்டியல்: ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்கள்!

“கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளிக்கப்படும். ஆம்னி பேருந்துகளை காக்க ஆறு மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி