ஆப்நகரம்

ரேசன் கார்டில் அடுத்த அறு மாதத்திற்கு உள்தாள்தானாம்!

ரேஷன் கார்டில் அடுத்த ஆறு மாதத்திற்கான உள் தாள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது

TNN 20 Dec 2016, 9:18 pm
சென்னை : ரேஷன் கார்டில் அடுத்த ஆறு மாதத்திற்கான உள் தாள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil additional papers will added in ration card for six months
ரேசன் கார்டில் அடுத்த அறு மாதத்திற்கு உள்தாள்தானாம்!


இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை தரப்பில் இருந்து கூறும்போது" ரேஷன் கார்டில் அடுத்த ஆறு மாதத்திற்கான உள் தாள் ஒட்டப்படும் தமிழகத்திலுள்ள 47 சதவீத குடும்பங்களில் உள்ள அனைவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் மீதமுள்ள குடுமபங்களில் ஆதார் எண் இணைக்கும் பணி முழுமையடையாததால் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டிற்கு வர சில காலங்கள் ஆகும்.

இதனால் 2017-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களுக்கு ரேசன் கார்டில் உள்தாள் ஓட்டப்படும். ஆதார் எண் இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு ஸ்மார்ட் கார்டு சில காலங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று "உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை தரப்பில் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி