ஆப்நகரம்

மாதவரம் தீவிபத்து: 18 மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் - சைலேந்திரபாபு ட்வீட்

நேற்று இரவு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் காற்று எந்தவித மாசுபாடும் அடையவில்லை என்று தெரியவந்தது.

Samayam Tamil 1 Mar 2020, 1:57 pm
மாதவரம் தீவிபத்து சுமார் 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது. உயிர்பலிகள் ஏதும் இல்லாமல் இவ்வளவு பெரும் விபத்தை சமாளிக்க சுமார் 26 தீயணைப்புக் குழுவினர் இணைந்து இந்த தீயை அணைத்துள்ளனர் என்று ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sylendra babu


சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து நிலையம் அருகே ரசாயன குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதால் வானில் கரும்புகை எழுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

25 தீயணைப்பு வாகனங்கள், 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20 தனியார் தண்ணீர் லாரிகள் அழைத்து வரப்பட்டன.

மாதவரம் ரசாயனக் கிடங்கில் எப்படி தீப்பிடித்தது? காற்று மாசு ஏற்பட்டுள்ளதா? சேத விவரம் என்ன?

நேற்று மாலை முதல் சுமார் 18 மணி நேரப்போராட்டத்துக்குப் பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. நேற்று இரவு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் காற்று எந்தவித மாசுபாடும் அடையவில்லை என்று தெரியவந்தது.


இந்நிலையில், தீயணைப்புத்துறை ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு தீயணைப்பு வீரர்களைப் பாரட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். “இரசாயன கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீயை 18 மணி நேரமாக போராடி கட்டு படுத்தி உயிர் சேதம் தடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள். Congratulations to the firemen who valiantly fought and localised the serious fire in a chemical godown in Madhavaram” என்று அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி